காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.


Coimbatore: காரமடையை அடுத்த சீளியூர் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜண்ணன் என்பவரின் விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் சுமார் 10 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியிருந்தது.



நேற்று முன்தினம் மாலை தோட்டப்பணிகளை முடித்து வீட்டிற்கு சென்ற ராஜண்ணன், மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்தபோது கிணற்றிலிருந்து விலங்குகள் ஓலமிடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, தாய் மற்றும் குட்டி என இரண்டு காட்டுப்பன்றிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர் காரமடை வனத்துறையினருக்கும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அனில் குமார் மற்றும் காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கிணற்றுக்குள் இறங்கி காட்டுப்பன்றிகளை மீட்க முயன்றனர்.

காட்டுப்பன்றிகள் தாக்கக்கூடும் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வலை விரித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவற்றை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...