மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.



நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லாரிகள் மூலம் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால், வாரத்தின் பெரும்பாலான நாட்களில் லோடுகளை இறக்குவதற்காக வரும் கனரக லாரிகள் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த சாலையின் வழியாகவே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், நெல்லித்துறை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவசர மருத்துவ உதவிக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் லாரி டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் அது கைகலப்பாக மாறுவதாகவும் கூறப்படுகிறது.

லாரிகளை முறையாக சாலையோரத்தில் நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டும், சிலர் காவல்துறை உத்தரவுகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். எனவே, தொடர் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...