கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.


Coimbatore: இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில், தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் கே.ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் வினித் குமார், திவ்யா மற்றும் கௌதம் சாந்த் சோனி உள்ளிட்ட குழுவினர் கோவையில் உள்ள ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டுகளை பரிசோதித்ததில், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தரமற்ற ஹெல்மெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக BIS சட்டம் 2016-ன் பிரிவு 28ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து BIS அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக ஹெல்மெட்டுகளில் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், BIS CARE செயலியின் மூலம் பொருட்களின் தரச் சான்றுகளை சரிபார்த்து வாங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...