கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. எம்.பி.ஏ கட்டிடத்தின் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டதுடன், தேர்வுத் துறை விடைத்தாள் அறையிலும் நீர் கசிவு ஏற்பட்டதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.




கோவை:

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.



குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில், சுற்றுச்சூழல் அறிவியல் துறை கட்டிடம் மற்றும் எம்.பி.ஏ (MBA) துறை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய மரங்கள் வேரோடு சரிந்தன.



இதில், எம்.பி.ஏ துறை கட்டிடத்தின் முதல் தளத்தின் மீது ராட்சத மரம் ஒன்று முற்றிலும் சாய்ந்து விழுந்ததில், கட்டிடத்தின் கூரைத் தகடுகள் சுக்குநூறாக உடைந்தன. மேலும், மரத்தின் கிளைகள் துறை மண்டபத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தின.



இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு நிகழ்ந்ததால், அச்சமயம் கட்டிடத்திற்குள் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், கட்டிடத்திற்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அங்கு இருந்த நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர்வுத் துறை அறைக்குள்ளும் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விடைத்தாள்கள் சேதமடைந்திருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர். ராஜவேலிடம் கேட்டபோது, “சனிக்கிழமை காலை முதலே பல்கலைக்கழக வளாகத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட கட்டமைப்பு சேதங்கள் மற்றும் தேர்வுத் துறையில் ஏற்பட்ட நீர் கசிவு குறித்து ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...