மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges ஆகியவற்றை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




கோவை:

மின்சாரத்துறையில் நிலையான கட்டணம் மற்றும் Demand Charges ஆகியவற்றை குறைக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நிலை மற்றும் தேவை கட்டணங்களை (Demand - Fixed Charges) 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.



மேலும், ரூப் டாப் சோலார் (Roof Top Solar) மின் உற்பத்தி திட்டத்திற்கு உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“தமிழக ஜவுளித் தொழில்துறைக்கு ஆண்டுதோறும் 110 லட்சம் பேல் பருத்தி தேவைப்படுகிறது. ஆனால் மாநிலத்தில் ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் பேல் பருத்தி மட்டுமே விளைவிக்கப்படுகிறது. எனவே, பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அனைத்து தொழில்களுக்கும் தேவையான மூலப்பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,” என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்தார்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் செங்கோட்டையன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...