கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் நிலை நுழைவாயிலில் போதிய கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் அனுமதியின்றி விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினரால் (CISF) தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் வழியனுப்ப வருபவர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பு உள்ளிட்ட பலகட்ட பாதுகாப்பு சோதனைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில், விமான நிலையத்தின் இடது புறத்தில்அமைந்துள்ள பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய கண்காணிப்போ அல்லது அடையாளச் சரிபார்ப்போ இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நுழைவாயிலை பெரும்பாலும் விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தொழிலாளர்கள் தினசரி பணிக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாததால் வெளிநபர்களும் அதே வழியாக விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எந்தவித பாதுகாப்பு சோதனையும் இன்றி நுழையும் நபர்கள், விமான நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், விமான நிலைய நிர்வாகமும் CISF அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் பாதுகாப்பு கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதன் மூலம் விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பு தரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர


Newsletter

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...

பீகாரில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட 45 கிலோ கஞ்சா பறிமுதல் - மூவர் கைது

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையின்போது ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கஞ்சாவை போலீ...

ஆராய்ச்சியாளர்கள் - தொழில்முனைவோர்கள் சந்திப்பு: உணவு தொழில் வளர்ச்சிக்கு TNAU-வில் ‘Connect & Grow’ நிகழ்ச்சி.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘Connect & Grow – Food Business Meet’ நிகழ்ச்சியில், உணவு பதப்படுத்...

கோயம்புத்தூர் தெற்கு பாஜக மாவட்ட சமூக ஊடகப் பொறுப்பாளர்  விக்னேஷ் பதவி விலகல்

Coimbatore தெற்கு மாவட்ட பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர்  விக்னேஷ் தனது பதவி மற்றும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியு...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலையில் சிறப்பு வழிபாடு

BJP தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை மக...

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜூன் 9 முதல் அரசு பொருட்காட்சி தொடக்கம்

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜூன் 9 முதல் அரசு பொருட்காட்சி தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 29 அரசு துறைகளி...