SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது.


கோவை: 2026 மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றது. சிவகங்கை 97.54 சதவீதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் 97.41 சதவீதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை மாவட்டம் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிறப்பிடம் பிடித்து மாநில அளவில் 7-வது இடத்தை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 37,844 மாணவர்களில் 36,742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும், திருப்பூர் 96.28 சதவீதம் தேர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் 96.32 சதவீதம் மற்றும் நாமக்கல் 96.01 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

சேலம் மாவட்டம் 94.21 சதவீதம் தேர்ச்சியையும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முறையே 93.94 சதவீதம் மற்றும் 89.43 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்துள்ளன.

மாநிலம் முழுவதும் போலவே, கொங்கு மண்டல மாவட்டங்களிலும் மாணவிகள் தொடர்ந்து மாணவர்களை விட அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முன்னிலை வகித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதம் ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.47 சதவீதம் தேர்ச்சியும், மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...