டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து போராட்டம்.

பொள்ளாச்சி அருகே சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சொந்த ஊரான திப்பம்பட்டி பூங்கா நகரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மது பாட்டில்களை வீசி உடைத்து போராட்டம்.

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி பூங்கா நகரில் உள்ள விவசாயத்தோட்டத்தில் நெடுஞ்சாலையிலிருந்து அகற்றப்பட்ட மதுபான கடை  புதிதாக திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தகவலறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி நேற்று  அதே இடத்தில் மதுபான கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இன்று கடையை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென ஆவேசமாக பூட்டைஉடைத்து கடையில் இருந்த மதுபாட்டில்களை  கடைமுன்பு  உடைத்து நொருக்கியதால் பெரும்பரபரப்பு ஏற்ப்பட்டது.

பின்னர் அங்கு வந்த காவல்துறை மற்றும் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடையை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மதுபானக்கடைக்கு எதிராக துணை சபாநாயகர் ஊரிலேயே பொதுமக்கள் கடையை உடைத்திருப்பது ஆளும் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...