உதகையில் 15வது ரோஜா கண்காட்சி துவக்கம்


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 15-வது ‘உதகை ரோஜா கண்காட்சி 2017’ இன்று தொடங்கியது. 



உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த 15-வது ஆண்டு கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக 31 ஆயிரம் ரோஜா மலர்களால் 15 அடி நீளம் மற்றும் 10 அடி உயரம் கொண்ட ரோஜாவின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. 



மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியத்தை காட்சிப்படுத்தும் விதமாக 7 பரதநாட்டிய முத்திரைகளுடனான பெண் உருவ அமைப்பை, உதகை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறையினர் வடிவமைத்திருந்தனர். 



கிருஷ்ணகிரி மாவட்ட தோட்ட கலைத்துறையினர் ரோஜாக்களை கொண்டு அல்போன்ட்சா மாம்பழத்தின் உருவ அமைப்பையும், சேலம் மற்றும் மதுரை மாவட்ட தோட்ட கலைத்துறையினர் முறையே ராக்கெட் மற்றும் புறா-வின் உருவங்களையும் வடிவமைத்திருந்தனர். ரோஜாக்கள் மட்டுமன்றி, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு உருவ அமைப்புகளும், ‘கார்ட்டூன்’ வடிவங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. 



இக்கண்காட்சியை காண ஊட்டி ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.  இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இக்கண்காட்சி நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.    

        



            

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...