காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். 197 கடைகள் மூடல், நாளொன்றுக்கு ₹2 கோடி வருவாய் இழப்பு. மண்டல அலுவலக முற்றுகையில் 500 பணியாளர்கள்.


Tiruppur: திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் பணியை நிறுத்தி, அதற்கான தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் 197 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து இன்று முதல் அனைத்து கடைகளையும் அடைத்து விட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலி மது பாட்டில்கள் மீட்பு என்பது கூடுதல் வேலைச்சுமையை ஏற்படுத்துவதாகவும், இதற்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் திருப்பூர் மண்டல டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள், "எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடைகளை திறக்க மாட்டோம். இந்த வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ₹2 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்" என்று தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் இன்று முழுமையாக மூடப்பட்டுள்ளதால், மது வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அரசு அதிகாரிகள் இதுவரை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

டாஸ்மாக் பணியாளர்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவும் சூழலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...