கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கோவை: இஸ்லாமியர்களின் புனித ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாகக் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக இந்த ஈகை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தவாறு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.
அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜாக் அமைப்பினர் உலகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டனர். மக்கள் நலமுடன் வாழ வேண்டும், உலகம் அமைதி பெற வேண்டும், அனைவரிடமும் ஈகை பண்பானது மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.
நபிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்ச்சியில் திளைத்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக இந்த ஈகை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தவாறு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.
அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜாக் அமைப்பினர் உலகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டனர். மக்கள் நலமுடன் வாழ வேண்டும், உலகம் அமைதி பெற வேண்டும், அனைவரிடமும் ஈகை பண்பானது மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.
நபிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்ச்சியில் திளைத்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.