குடிநீர் பிரச்சனைகாக பொதுமக்கள் மறியல் உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பகுதிக்கு குடிநீர் விநியோகத் தட்டுப்பாடு நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன்  இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீரை அனைத்து வார்டு பகுதிகளுக்கும் விநியோகித்து வருகிறது. குறிச்சிப் பகுதியான ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டருக்கும், பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 40 இலட்சம் லிட்டர் குடிநீரும் பெறப்பட்டு வருகிறது.

தற்பொழுது, பொள்ளாச்சி பிரதான சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் ஆழியாறு திட்டத்தின் பிரதான குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. மேலும், தலைமை நீரேற்று நிலையம் மற்றும் நீர்உந்து நிலையங்களில் மின்தடை ஏற்படுவதாலும், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்படுகிறது.

மேலும், பில்லூர் அணைப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து சில நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், குறிச்சி பகுதிக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களால் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், பருவமழை பொய்த்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் மேற்கண்ட பகுதிகளில் கிணற்று நீர் விநியோகம் செய்வதிலும் சற்று காலதாமதம் ஏற்படுகிறது, அவ்வப்போது பெறப்படும் புகார்களை சரிசெய்ய உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விநியோகக் குழாய்கள் அமைத்து கிணற்று நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயற்கையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் சிலர் சாலை மறியல், பேருந்து மறியல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த தவறான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வளவு கடுமையான வறட்சி நிலையிலும் தமிழக அரசின் போர்கால நடவடிக்கைகளால் குனியமுத்தூர், குறிச்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...