கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தி போடும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கத்திப்போடும் நிகழ்பில் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய கத்தி போடும் திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்து, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் “வீசுக்கோ… தீசுக்கோ…” என்ற கோஷங்களை முழங்கியவாறு அம்மனை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். இந்த ஊர்வலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது கைகள், மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் கத்திகளால் காயப்படுத்திக் கொண்டு பக்தியை வெளிப்படுத்தினர். ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாரம்பரிய திருவிழா நடைபெற்றதால், பக்தர்களிடையே மிகுந்த உற்சாகமும் ஆர்வமும் நிலவியது. விழாவின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த பாரம்பரிய திருவிழா தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை பிரதிபலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
விழாவையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் “வீசுக்கோ… தீசுக்கோ…” என்ற கோஷங்களை முழங்கியவாறு அம்மனை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். இந்த ஊர்வலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது கைகள், மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் கத்திகளால் காயப்படுத்திக் கொண்டு பக்தியை வெளிப்படுத்தினர். ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாரம்பரிய திருவிழா நடைபெற்றதால், பக்தர்களிடையே மிகுந்த உற்சாகமும் ஆர்வமும் நிலவியது. விழாவின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த பாரம்பரிய திருவிழா தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை பிரதிபலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.