செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, செங்குளத்தில் இருந்த சுமார் 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தன்னார்வலர்கள் துணையுடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் உள்ள புதர்கள் கட்டிட கழிவுகள் ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.



மேலும், 12.5 கிமீ தூரமுள்ள குனியமுத்துர் தடுப்பணை வாய்க்கால் தூர்வாரும் பணியானது நமது கோவை நமது பசுமை அமைப்பின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 150 தன்னார்வலர்கள், கேமரூன் மனுஃபேட்சரிங் இந்தியா பிவிடி லிமிட்டடு உதவியுடன் வெள்ளலூர் குளத்தில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை 65 சதவிகிதம் பணி நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து, மலுமிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் மழை நீர் குட்டை தூர்வாரும் பணியினையும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் துவங்கி உள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...