கோடை விடுமுறை முடிவு: திருப்பூர் பள்ளிகள் திறப்பு - மாணவிகளுக்கு இனிப்பு, ரோஜா பூக்களுடன் வரவேற்பு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிவில் மாணவிகளுக்கு போலீசார் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள், ரோஜா பூக்கள் வழங்கி பேண்டு வாத்தியத்துடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர். மாணவிகள் மொபைல் எடுத்து வராமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்தனர்.


Tiruppur: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்து வகை பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வியாண்டின் முதல் நாளில் மாணவிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.






பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மாணவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ஆசிரியர்கள் ஒழுங்குப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். முதல் நாள் குழந்தைகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோர்கள் பள்ளியிலிருந்து வெளியே செல்ல மனமின்றி பள்ளி வளாகத்தின் கேட் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






பள்ளிக்கு வரும் மாணவிகள் மொபைல் போன்களை எடுத்து வரக்கூடாது என போலீசார் அறிவுரை செய்து பள்ளிக்குள் மாணவிகளை அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதால் எந்தவித பிரச்சனையும் இன்றி பள்ளி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் வருகை தந்த 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பு வரவேற்பு அளித்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவிகளை பள்ளிக்குள் ஊர்வலமாக அழைத்து சென்று அவரவர் வகுப்பறைகளில் அமர வைத்தனர்.




புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்கிய மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். ஆசிரியர்களும் மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து புதிய கல்வியாண்டை தொடங்கினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...