விபத்துக்குப் பிறகே பாதுகாப்புப் பலகை? கோவையில் ரயில்வே கட்டுமானக் குழியில் விழுந்து முதியவர் படுகாயம்

கோவை: தண்ணீர் பந்தல் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


கோவை: கோவை தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் தோண்டப்பட்டிருந்த ஆழமான குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.




கோவை தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் பல மாதங்களாக ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் பல இடங்களில் ஆழமான அஸ்திவாரக் குழிகள் தோண்டப்பட்டு, இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், அந்த வழியாக சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் இருந்த கட்டுமானக் குழியை கவனிக்காமல் சைக்கிளோடு நேரடியாக அதற்குள் விழுந்தார்.






குழிக்குள் இருந்த இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்ட் கட்டைகள் காரணமாக அவர் படுகாயமடைந்து அங்கிருந்தே எழ முடியாமல் தவித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குழிக்குள் இறங்கி முதியவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.




இந்த விபத்துக்கு முக்கிய காரணம், கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரின் அலட்சியம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஆபத்தான குழிகள் தோண்டப்பட்டிருந்த போதிலும், அவற்றைச் சுற்றி போதுமான பாதுகாப்புத் தடுப்புகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.






மேலும், விபத்து நடந்த பின்னரே ஒப்பந்ததாரர் தரப்பினர் அவசர அவசரமாக சம்பவ இடத்தில்

பாதுகாப்புப் பலகைகள் மற்றும் தடுப்புகளை அமைத்ததாகவும், தங்களது அலட்சியத்தை மறைக்க முயற்சித்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், விபத்தில் காயமடைந்த முதியவருக்கு ஒப்பந்ததாரர் தரப்பில் இருந்து உரிய மருத்துவ உதவி அல்லது நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.




கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாலக் கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அலட்சியம் காட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...