பீளமேடு வார்டு 27-ல் சுகாதார மையம், பள்ளி, தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆரம்ப சுகாதார மையம், பள்ளியில் புத்தக வழங்கல், சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு மேம்பாட்டு மற்றும் நலத்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாரதி காலனி ஆரம்ப சுகாதார மையம், துவக்கப்பள்ளி, சாக்கடை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் அடங்கும்.



பீளமேடு பாரதி காலனி பகுதியில் இயங்கி வரும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டையும் சரிபார்த்தார். இந்த ஆய்வில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.



பீளமேடு கோயமுத்தூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு புதிய புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கவுன்சிலர் அம்பிகா தனபால் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை நேரடியாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இதில் உடன் இருந்தனர்.



கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பாரதி காலனி பகுதியில் தினசரி குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறுகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் பேட்டரி ஆட்டோ மூலம் குப்பை சேகரிப்பு பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...