மின்தடை புகார்களுக்கு ‘மின்னகம்’ சேவையை பயன்படுத்த மின்வாரியம் அறிவுறுத்தல்

மின்தடை,!ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை, ஜூன் 5: மின்தடை மற்றும் மின்விநியோகம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய பொதுமக்கள் ‘மின்னகம்’ (Minnagam) சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் தங்களின் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், குறிப்பாக ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), மின்தடை, குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களையும் 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் ‘மின்னகம்’ சேவையை அதிகளவில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...