உலக சுற்றுச்சூழல் தினம்: துணிப்பை தானியங்கி இயந்திரம் திறந்து வைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) மனிதச் சங்கிலி, மரக்கன்று வழங்கல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துணிப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை, ஜூன் 5: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பசுமை முன்னெடுப்புகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



“இயற்கையிலிருந்து ஊக்கம் பெறுவோம்! காலநிலைக்காக! நமது எதிர்காலத்திற்காக!” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்வை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் துணிப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பலன்தரும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் அ. பரணி வரவேற்புரை வழங்கினார். இயற்கை வள மேலாண்மை இயக்குநர் முனைவர் சு. கார்த்திகேயன் துவக்கவுரை நிகழ்த்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.



மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர் ஞா. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, திரு. வி. திருநாவுக்கரசு இ.வ.ப. உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்காக ஓவியம், கவிதை, புதையல் வேட்டை, விளம்பர நாடகம், மீம் உருவாக்கம் மற்றும் மாதிரி பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகள் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்ததோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் வலுப்படுத்தின.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தனிமனிதர்களின் சிறிய செயல்பாடுகளே பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதை வலியுறுத்திய பல்கலைக்கழக நிர்வாகம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து நிலையான வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...