சூலூர் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்; போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் கார்த்தி மற்றும் மோகன்ராஜுக்கு 3 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கபட்டனர்.


கோவை:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் ஆகியோர், 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற நுழைவாயில் முதல் போக்சோ நீதிமன்ற அறை வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...