பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலையில் சிறப்பு வழிபாடு

BJP தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை மக்கள் சேவை மையம் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. BJP நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Coimbatore: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கோவையின் பல்வேறு கோவில்களில் BJP தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று சிறப்புப் பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றன.






BJP அகில இந்திய தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி கோவை மாவட்ட BJP நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவர் நடத்தி வரும் கோவை மக்கள் சேவை மையம் அமைப்பின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.






அதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோவிலில் கோவை மக்கள் சேவை மையத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் BJP தொண்டர்கள் வானதி சீனிவாசன் பெயரில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். அவர் நீடூழி வாழவும் மக்கள் பணி சிறக்கவும் வேண்டி வழிபாடுகள் நடைபெற்றன.






கோவில் வழிபாடுகள் முடிந்ததைத் தொடர்ந்து பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் விதமாக மருதமலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட BJP நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் பங்கேற்றனர்.


Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...