பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலையில் சிறப்பு வழிபாடு

BJP தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை மக்கள் சேவை மையம் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. BJP நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Coimbatore: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கோவையின் பல்வேறு கோவில்களில் BJP தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று சிறப்புப் பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றன.






BJP அகில இந்திய தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி கோவை மாவட்ட BJP நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவர் நடத்தி வரும் கோவை மக்கள் சேவை மையம் அமைப்பின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.






அதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோவிலில் கோவை மக்கள் சேவை மையத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் BJP தொண்டர்கள் வானதி சீனிவாசன் பெயரில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். அவர் நீடூழி வாழவும் மக்கள் பணி சிறக்கவும் வேண்டி வழிபாடுகள் நடைபெற்றன.






கோவில் வழிபாடுகள் முடிந்ததைத் தொடர்ந்து பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் விதமாக மருதமலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட BJP நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் பங்கேற்றனர்.


Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...