கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட்டி மற்றும் கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore:

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் கள ஆய்வு மேற்கொண்டார்.



கூடலூர் நகராட்சிக்குட்பட்ட செல்வபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, பள்ளியில் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதமடைந்து, இரும்புக் கம்பிகள் வெளிப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைக்க நகராட்சி ஆணையர் மூவேந்திரனுக்கு எம்எல்ஏ சுனில் ஆனந்த் உத்தரவிட்டார்.

தொடர்ந்து திருமலை நாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்திருந்ததை பார்வையிட்டு, அவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது 6-வது வார்டு விஜயா நகர் பகுதி பொதுமக்கள், சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சுனில் ஆனந்த், விரைவில் சாலை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழக கூடலூர் நகரச் செயலாளர் சத்யகுமார், நகர நிர்வாகிகள் சரவணன், ஷகிலா, பூர்ணிமா, விஜய், விக்னேஷ், வெங்கடேஷ், கவுசிக், மவுரி, அஜித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...