கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், எரியாத விளக்குகளை கண்டறிந்து உடனடி சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


Coimbatore:

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் அமைந்துள்ள தெருவிளக்குகளின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் தற்போது சுமார் 1,03,755 தெருவிளக்குகள் உள்ள நிலையில், அவை முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வரி வசூல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று இரவு 100 சதவீத ஆய்வை மேற்கொண்டனர்.



ஆய்வின் போது எரியாத தெருவிளக்குகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உடனடியாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, மரக்கடை சாலை, மில் ரோடு, பூமார்க்கெட், சுக்கிரவார்பேட்டை மற்றும் காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளின் நிலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...