கல்லூரி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பாஜக இளைஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு

கல்லூரி பகுதியில் அதிகளவில் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பாஜக இளைஞர் அணியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கல்லூரிகள் நிறைந்த இப்பகுதிகுயில் அதிகளவிலான கஞ்சா விற்பனைகளும் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. 

இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், ரோந்து என்ற பெயரில் சென்று சிலரை கைது செய்து பின் விடுவித்து விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து தங்களது கஞ்சா விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாதம்பட்டி- காலபாளையம் சாலையிலும் சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...