ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1.03 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி பகுதியில், கடந்த 2012-ஆம் ஆண்டு "ஆதவன்" என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். முதலீட்டாளர்களை கவரும் வகையில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் வழங்கப்படுவதுடன், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குறுதிகளை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்த நிலையில், முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியின்படி தொகை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 115 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பண்ணை உரிமையாளர்களான சந்திரசேகரன், சோமசுந்தரம், கணக்கர் அமுதா மற்றும் பங்குதாரர்களான ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணையில் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதன்படி, சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...