விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னியம்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தயார் செய்யப்பட்டது. அதன்படி, 600 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர். இதில், 150 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் உள்ளது. ஏனைய 450 ஏக்கர் நிலமும் அப்பகுதியில் குடியிருக்கும் சாதாரண மக்களிடமிருந்து கையகப்படுத்துவது என முடிவு செய்தனர்.



இத்திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்த போதிலிருந்தே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். தொடர்ந்து, கையகப்படுத்துவதை நிறுத்த முடியாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.

இதைத்தொடர்ந்து, கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை விலை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க துவங்கினர். ஆனால், அதையும் மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக வந்தது. அதில், சந்தை விலையோ அல்லது, 2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையும், மாநில அரசு அமல்படுத்த தயங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று சின்னியம்பாளையம் ஊராட்சி 4-வது வார்டு பொதுமக்கள் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் 150 வீடுகளும், 30 தொழிற்சாலைகளும் உள்ளன. இதனால் 3 ஆயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். 

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 60 லட்சம் ரூபாய் மற்றும் கூடுதலாக 30 லட்சம் என மொத்தம் 90 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தனர். ஆனால், தற்போது 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போதைய சந்தை விலையே ஒரு சென்ட் 10 லட்சம் வரை செல்லும் போது அரசு அறிவித்துள்ள தொகை ஏமாற்றம் அளிக்கிறது.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மேலும், எங்களது பகுதிக்கு விரைவில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...