சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு


கோவை சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்: 1531) அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அன்னை கஸ்தூரிபா மகளிர் நுகர்வோர் அமைப்பு அளித்துள்ள மனுவில், குடியிருப்புகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் நிறைந்த பகுதி கோவை சிவானந்தா காலனி. இப்பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை (எண்: 1531) செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு வரும் மது பிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் செல்லும் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலையைக் கடந்தே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

மேலும், சாலையோரம் நிற்கும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அமர்ந்தும் மது அருந்தி வருகின்றனர். இதனால், பெண்கள் வெளியில் செல்வே முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் இருந்தபோது மனு அளித்தோம். மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய ஆட்சியர் உறுதியளித்தார். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. 

கோவை மாவட்ட அட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...