இந்து மதத்தையும், பெண்கள் சமூகத்தையும் இழிவாக பேசும் கிருத்துவ போதகர் மீது நடவடிக்கை கோரி அகோரிகள் போராட்டம்

கோவையில் இந்து மதத்தையும், இந்து மத பெண்களையும், காசி அகோரிகளையும் இழிவுப்படுத்தி கிருத்துவ போதகர் பேசுவதாகவும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தை தடை செய்யக்கோரியும், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உடுக்கை அடித்தும், சங்கு ஊதியும் அகோரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிறித்துவ மத போதகர் ஆண்டர்சன். இவர், வெளியிட்டு வரும் யெகோவா-யீரே-ன் குமுறலின் சத்தம் என்ற ஜெப குறிப்பு புத்தகங்களில் தொடர்ந்து இந்து மத பெண்களை இழிவுப்படுத்தி வந்ததாகவும், காசி அகோரிகளை பிணம் திண்பவர்கள் என இழிவுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் குமுறலின் சத்தம் புத்தகத்தை தடை செய்யவும், எழுதிய ஆண்டர்சனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யக்கோரியும், காசி அகோரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.



அப்போது சங்கு ஊதியும், உடுக்கை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அகோரிகள், இந்து மத பெண்களையும், அகோரிகளை பிணம் திண்ணும் பேய்கள் என இழிவுபடுத்திய புத்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், அப்புத்தகத்தை வெளியிட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வடுகொடுமை தடுப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும், நடவடிக்கை எடுக்கத்தவறினால் காசியில் இருந்து நிர்வாண அகோரிகளை வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...