இந்து மதத்தையும், பெண்கள் சமூகத்தையும் இழிவாக பேசும் கிருத்துவ போதகர் மீது நடவடிக்கை கோரி அகோரிகள் போராட்டம்

கோவையில் இந்து மதத்தையும், இந்து மத பெண்களையும், காசி அகோரிகளையும் இழிவுப்படுத்தி கிருத்துவ போதகர் பேசுவதாகவும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தை தடை செய்யக்கோரியும், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உடுக்கை அடித்தும், சங்கு ஊதியும் அகோரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிறித்துவ மத போதகர் ஆண்டர்சன். இவர், வெளியிட்டு வரும் யெகோவா-யீரே-ன் குமுறலின் சத்தம் என்ற ஜெப குறிப்பு புத்தகங்களில் தொடர்ந்து இந்து மத பெண்களை இழிவுப்படுத்தி வந்ததாகவும், காசி அகோரிகளை பிணம் திண்பவர்கள் என இழிவுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் குமுறலின் சத்தம் புத்தகத்தை தடை செய்யவும், எழுதிய ஆண்டர்சனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யக்கோரியும், காசி அகோரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.



அப்போது சங்கு ஊதியும், உடுக்கை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அகோரிகள், இந்து மத பெண்களையும், அகோரிகளை பிணம் திண்ணும் பேய்கள் என இழிவுபடுத்திய புத்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், அப்புத்தகத்தை வெளியிட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வடுகொடுமை தடுப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும், நடவடிக்கை எடுக்கத்தவறினால் காசியில் இருந்து நிர்வாண அகோரிகளை வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...