பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த காதலர்கள்: காதலி பரிதாப சாவு


தாராபுரம் உப்பர் டேம் பகுதியில் வசிப்பவர் மோகன். இவரது மகள் அஞ்சு (19). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தாராபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்தனர். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் (23) என்பவரும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அஞ்சு மற்றும் சஞ்சீவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அஞ்சு நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த எலி மருந்தை உண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையறிந்த அவரது பெற்றோர், அஞ்சு-வை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அஞ்சு இன்று காலை பரிதாபமாக பலியானார். காதலி விஷம் அருந்தியதை அறிந்த சஞ்சீவ் நேற்று விஷம் குடித்தார். இதையறிந்த அவரது நண்பர்கள் சஞ்சீவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்போது சஞ்சீவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...