ஸ்ட்ரைக் எதிரொலி- ரயில் நிலையத்திலும், தனியார் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து பல்வேறு மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறைத்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிலையங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் அங்கு மக்கள் நெரிசல் அதிகமாகியுள்ளது.



அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்காததால், தனியார் டூரிஸ்ட் பஸ்கள் கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன.



இதனால், தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஒட்டிகளை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான கோவை நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...