ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், துடியலூர் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


கோவை: கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் போதைப் பொருள் தடுப்பு குழு மற்றும் துடியலூர் காவல்துறை சார்பில், துடியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, கோவை–மேட்டுப்பாளையம் சாலை வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று விஸ்வநாதபுரம் அருகே நிறைவடைந்தது.



இந்த பேரணியை, கோவை மாநகர காவல்துறை வடக்கு துணை ஆணையர் தங்கதுரை ஐபிஎஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், துடியலூர் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், “ஒரு கணம் போதை, ஆயுள் முழுவதும் வேதனை”, “போதைக்கு அடிமையாவதை விட கனவிற்கு அடிமையாகுங்கள்”, “போதையின் பாதையை தவிர்ப்போம்; நலமான வாழ்வை உருவாக்குவோம்”, “போதைப் பொருள் வாழ்க்கையின் எதிரி” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், போதைப் பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.



முன்னதாக, துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடக்கு துணை ஆணையர் தங்கதுரைக்கு , ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் டாக்டர் டி. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து, துணை ஆணையர் தங்கதுரை மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், சமூகத்தில் யாரேனும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தெரிந்தால், அவர்களை நல்வழிப்படுத்தி போதையில் இருந்து மீட்டெடுக்க தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், “போதையில்லா தமிழகம் உருவாக மாணவர்கள் முழுமனதுடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சாய்பாபா காலனி சரக உதவி ஆணையர் சரவணன், போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன், கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி, குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் முத்துலட்சுமி, புலனாய்வு கட்டுப்பாட்டு அமைப்பின் முரளிகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பார்த்திபன், துடியலூர் காவல் நிலைய காவலர்கள், போதை தடுப்பு மன்ற தலைவர் பூபால்ராஜ், தேசிய மாணவர் படை தலைவர் ரகுபதி, நாட்டு நலப்பணித் திட்ட தலைவர் விணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...