கணியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து- இருவர் உயிரிழப்பு


கோவையை அடுத்த கணியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது, வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

சேலம் - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த கார் கோவையை அடுத்த கணியூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, திடீரென டயர் வெடித்து பழுதாகி சாலையில் நின்றது. இதனை பார்த்த இரு சக்கர வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்க உதவிக்கொண்டிருந்தனர். 

இதனிடையே, திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி மற்றொரு கார் வேகமாக வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, பழுதாகி நின்றுகொண்டிருந்த காரிரை பார்த்த கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கார்களில் இருந்தவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். அதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்தும், பலியானவர்கள் விபரங்கள் உள்ளிட்டவை குறித்தும் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...