20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டதற்காக, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவருக்கு 2025–26ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் சிறப்புப் பணிக்கான விருது வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சென்னையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 2025-26ஆம் ஆண்டிற்கான சிறப்புப் பணிக்கான விருதுகளை வழங்கினார்.



அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப. விருது மற்றும் நற்சான்றிதழைப் பெற்றார்.

இதே விருது, முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். சரவணன், இ.ஆ.ப. மற்றும் முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி, இ.ஆ.ப. ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...