தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் முழு நிலவு விழிப்புணர்வு கூட்டம்


தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழுநிலவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு ஆலாங்கொம்பு கிராம நிர்வாக அலுவலர் பி.சீலன் தலைமை வகித்தார். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் நகராட்சி இளநிலை உதவியாளர் ஆர்.ஜெயராமன், ஆலாங்கொம்பு ஆரம்ப சுகாதார நிலை ஆய்வாளர் எஸ்.அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயக்குமார் பேசும் போது, குடும்ப வறுமையின் காரணமாக சிறு வயது குழந்தைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி அவர்களுடைய குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். விளையாட்டு, படிப்பு என்ற பள்ளி வாழ்க்கையை மறந்து குழந்தைகள் வேலைக்கு செல்வதால் அவர்களது உடல், மனம் பாதிக்கப்படுவதோடு கல்வி முற்றிலும் மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.

இது போன்று பாதிக்கப்படும் குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.

இது போன்ற திட்டங்களை பொது மக்கள் பயன்படுத்தி குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறுமுகை காவல் ஆய்வாளர் எம்.செல்வராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு காய்கறிகளின் எடை மற்றும் சத்துக்களை சொல்லும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு காய்கறிகள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் (பயிற்சி) ரமேஷ் குமார், சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்கள் கல்பனா, மும்தாஜ், ஜோதிமணி, களப்பணியாளர்கள் எழிலரசி, சரண்யா, ஊர்த்தலைவர் சந்திரன் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...