கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகளை பயன்படுத்திய வாகனங்கள் மீது கோவில்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து, அவற்றை அகற்றியதுடன் அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை-சக்தி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சில தனியார் பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை பாதிக்கும் வகையிலான உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த LED விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்து அபாயம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவில்பாளையம் போலீசார் இன்று சக்தி சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.



சோதனையில், விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து அவை அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.



விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய விதிமீறல் உபகரணங்கள் மீது போலீசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...