கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகளை பயன்படுத்திய வாகனங்கள் மீது கோவில்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து, அவற்றை அகற்றியதுடன் அபராதமும் விதித்தனர்.


கோவை: கோவை-சக்தி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சில தனியார் பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை பாதிக்கும் வகையிலான உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த LED விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி, விபத்து அபாயம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவில்பாளையம் போலீசார் இன்று சக்தி சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.



சோதனையில், விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன் LED விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து அவை அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.



விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய விதிமீறல் உபகரணங்கள் மீது போலீசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...