மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த சாலையின் ஓரத்தில் விசப்பட்ட 300 மதுபான பாட்டில்கள் மற்றும் பல நூறு கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றினர்.



மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையானது நீலகிரிக்கு இடையூறின்றி செல்லும் சாலை ஆகும். மேலும், போக்குவரத்து நெரிசல் குறைந்த இந்தச் சாலையினை ஒருசில பயணிகளே பயன்படுத்தி வரும் நிலையில், ஒருசிலர் அந்த சாலையில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை சாலையின் ஓரத்தில் வீசிச்செல்கின்றனர். மேலும், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றையும் சாலையில் வீசிச் செல்கின்றனர். 



இந்தச் சாலை வனப்பகுதிக்கு உட்பட்ட சாலை மற்றும் யானைகள் வழித்தடப் பாதையாகும். இதனால் சாலையில் வீசப்படும் மதுபாட்டில்கள் உடைந்து யானைகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் வைல்டு லைஃப் நேட்சர் கன்சர்வேசன் டிரஸ்ட், ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள், ஷெட்எஃப் வின்டு பவர் தனியார் நிறுவன ஊழியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வனத்துறையுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



இந்த தூய்மைப் பணியின் போது மேட்டுப்பாளையம்- கோத்தகிரிக்கு உட்பட்ட சாலையில் 300 மதுபான பாட்டில்களும், 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும் சேகரிக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வனப்பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும். அப்போதே வளமான பசுமையும், வன விலங்குகளும் காக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...