சங்கரா கண் மருத்துவமனையின் 40-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்


கோவை, சரவணம்பட்டி, சிவானந்தா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சங்கரா கண் மருத்துவமனையின் 40-வது ஆண்டு விழாவின் நினைவாக வரும் மே 21-ம் தேதியன்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்கும் "கேளடி கண்மணி" எனும் இசை நிகழ்ச்சி கோவை ஹிந்துஷ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுக்கு 9965511097 மற்றும் 9965511068 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது bookmyshow.com என்ற இணையதளத்தின் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஆர்.வி.ரமணி கூறியதாவது:-

சங்கரா கண் மருத்துவமனை கடந்த 1977-யில் டாக்டர் ஆர்.வி.ரமணி மற்றும் அவரது குழுவினரால் கோவை, ஆர்.எஸ்.புரம், காமாட்சியம்மன் கோவிலில் துவங்கப்பட்டது. பின் 1982-யில் காஞ்சி ஆச்சாரியரின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீ காஞ்சி காமகோடி மெடிக்கல் ட்ரஸ்ட் தொடங்கப்பட்டது.

1980-யில் இந்தியாவில் அதிக அளவில் பார்வைக் குறைபாடு நோய் இருந்தது. அந்த சமயத்தில் அதற்கு தீர்வுகான சங்கரா கண் மருத்துவமனை உருவாக்கப்பட்டது. 1985-யில் டாக்டர் ரமணியின் வழிகாட்டுதலிலும், குறிப்பாக டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியத்தின் பங்கேற்பாலும் மருத்துவ துறையில் கண் சிகிச்சைக்கென பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்தே சரவணம்பட்டி, சிவானந்தாகாலனி பகுதியில் சங்கரா கண் மருத்துவமனை துவங்கப்பட்டது. 

தற்போது கோவை, கிருஷ்ணன் கோவில், ஆந்திரா மாநிலம் குண்டூர், கர்நாடகா மாநிலம் பெங்களூர், ஷிமோகா, குஜராத்தில் ஆனந்த், பஞ்சாபில் லூதியானா, உத்திரபிரதேசத்தில் கான்புர் ஆகிய இடங்களில் சங்கரா கண் மருத்துவமனைகள் செயல்பட்ட வருகிறது. விரைவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர், மத்தியபிரதேசத்தின் இந்தூர், பான்வெல், தெலுங்கானாவின் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் அதன் செயல்பாடுகள் துவங்கும்.

தற்போது மருத்துவர்கள், 1800 முழு நேர ஊழியர்களுடனும், தன்னார்வலர்களுடனும், தன்னார்வ அமைப்புகளுடனும் இணைந்து தனது சேவையினை சங்கரா கண் மருத்துவமனை செயலாற்றி வருகிறது" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...