ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவர் மன்ற பதவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் பதவியேற்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் R.S.மாருதி சிறப்புரையாற்றினார்.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. S.N.R.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr.சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.






கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr.P.L.சிவக்குமார் மாணவர் மன்ற பதவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். B.Com. C.A. துறை மூன்றாம் ஆண்டு மாணவி R.சங்கீதா மாணவர் மன்ற தலைவராகவும், B.Sc கணினி அறிவியல் Cyber Security துறை மூன்றாம் ஆண்டு மாணவி U.ஹேமாஸ்ரீ துணைத் தலைவராகவும் பதவியேற்றனர். B.Sc IT துறை இரண்டாம் ஆண்டு மாணவி K.காவியா செயலாளராகவும், BCA துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ருத்ர சர்மா துணைச் செயலாளராகவும் பதவியேற்றனர். இதேபோல் கல்லூரியில் செயல்படும் 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.




விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநருமான Rotarian R.S.மாருதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது: "நான் இந்த கல்லூரியில் படிக்கும் போது பெரிய அளவில் வெளி உலகம் தெரியாது. வேலை வாய்ப்புகள் குறைவு. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை. ஆனால், தற்போது நான் இந்த கல்லூரியைப் பார்க்கும்போது அபரிவிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. இங்கு கல்விச்சூழல் பலமடங்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது."






"உங்களுடைய திறனுக்கேற்ற 39 கிளப்புகள் இந்த கல்லூரியில் செயல்படுகின்றன. நீங்கள் மிகச் சரியாக பயன்படுத்தி உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். AI போன்ற தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி இன்னும் நாம் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். தலைமைத்துவத்தில் எண்ணற்ற சவால்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு சவாலையும் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பாக அணுகி முன்னேற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.




மேலும் பேசிய அவர், "நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதை முழுமையாக செய்பவராக இருக்க வேண்டும். நம் கல்விக்கேற்ற பணியைத் தேர்வு செய்து அதில் வெற்றி பெற வேண்டும். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, கிடைக்கும் வாய்ப்புகளைக் கைவசமாக்கி மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பி இல்லாமல் தன் கையே தனக்கு உதவி என்ற நோக்கில் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.




"நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கல்லூரி உங்கள் வாழ்க்கையின் பெரிய இலக்கைத் தொட முழுமையாக ஆதரவு தரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்" என்று அவர் குறிப்பிட்டார்.




முன்னதாக, B.Com. C.A. துறைத்தலைவர் R.கீதா வரவேற்றார். முடிவில் தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் N.சுமதி நன்றி கூறினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...