கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தரவுகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் அறிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் களப்பணியாளர்கள் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்வர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விரிவான சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணி செப்டம்பர் 2026 வரை நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பை சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitation Worker - CRW) மற்றும் சமூக வழி நடத்துனர்கள் (Community Facilitator - CF) ஆகியோர் வீடு வீடாக சென்று மேற்கொள்வர்.




மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் இல்லாத குடும்பங்களில் விவரங்களை பதிவு செய்ய குடும்ப அட்டையை மட்டும் வழங்கினால் போதுமானது என்று தெரிவித்தார். ஆனால், தங்களது இல்லங்களில் மாற்றுத்திறனாளிகள் இருப்பின், அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் அவர்களது முழு விவரங்களையும் கணக்கெடுப்பாளர்களிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.




மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் புதிதாக கண்டறியப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களுடைய விவரங்களை எந்த வித தயக்கமும் இன்றி களப்பணியாளர்களிடம் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார். இந்த சமூக தரவுகள் கணக்கெடுப்பிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




இந்த கணக்கெடுப்பின் நோக்கம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்குவதற்கான வழிவகை செய்வதாகும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் சமூக மறுவாழ்வு மற்றும் நலனுக்கான திட்டங்கள் மேம்படுத்தப்படும்.




இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை 0422-2380381 மற்றும் 9499933471 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...