கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் மைதானத்தில் நடைபெறுகிறது. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கின்றன.

கோவை: இந்திய ஹாக்கியின் வருங்கால சர்வதேச நட்சத்திரங்களை அடையாளம் காணும் 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு ஹாக்கி அலகு (Hockey Unit of Tamilnadu - HUT) சார்பில், ஹாக்கி இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் இந்த தேசிய அளவிலான போட்டியில், நாடு முழுவதும் இருந்து 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.



இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில்

பங்கேற்ற அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அலகின் பொதுச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்ராஜ்குமார் பேசுகையில்,

அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அலகின் பொதுச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்ராஜ்குமார் ஆகியோர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.



ஜூனியர் தேசிய பயிற்சி முகாமில் இடம்பெற்றுள்ள பல திறமையான வீரர்களும் இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளதால், இந்திய ஹாக்கியின் அடுத்த தலைமுறை சர்வதேச வீரர்களை நேரில் காணும் அரிய வாய்ப்பாக இந்த சாம்பியன்ஷிப் அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



12 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், 700-க்கும் மேற்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். பங்கேற்கும் அணிகளுக்காக தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் போட்டிகளை இலவசமாகக் கண்டு, இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...