கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு குறித்த இருநாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயார்நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.


Coimbatore: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் குறித்த இருநாள் பயிற்சி முகாம் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும்.

இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பாளர்களுக்கு தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ் மற்றும் சூப் மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயார்நிலை உணவுப் பொருட்களை தயாரிக்கும் நவீன முறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாமானது வீட்டுத் தொழில் தொடங்க விரும்புவோர், சுயதொழில் ஆர்வலர்கள் மற்றும் உணவுத் தொழில் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641003 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 94885-18268, 0422-6611340 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...