கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆதார் அட்டை, அதன் நகல் மற்றும் ரூ.10,000 முன்பணத்துடன் பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும்.

கோவை: கோவை மாவட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் கைப்பற்றப்பட்டு, சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையினர் தெரிவித்ததாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 102 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 106(2)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள், புலனாய்வு மற்றும் அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, ஏலக்குழு அதிகாரிகள் முன்னிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு, அவிநாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.

ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், ஏலத்திற்கு முன்பாக பிஆர்எஸ் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளலாம்.

ஏலத்தில் பங்கேற்பதற்காக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல், அசல் ஆதார் அட்டை, அதன் நகல் மற்றும் ரூ.10,000 திருப்பி வழங்கப்படும் முன்பணத்துடன் பிஆர்எஸ் மைதானத்தில் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

ஏலத்தில் வெற்றி பெறும் நபர்கள், ஏலத் தொகையுடன் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியையும் (GST) அன்றைய தினமே முழுமையாக செலுத்தி, வாகனங்களை பெற்றுச் செல்லலாம் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...