ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தேசிய தரநிர்ணயச் சான்றிதழ் (என்ஏபிஎச்)

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, இந்திய தரக் கவுன்சில் வழங்கும் அங்கீகாரச் சான்றினை பெற்றுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கவனிப்பு தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்எல்) இதை வழங்கியுள்ளது.

மருத்துவமனைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்து, மருத்துவமனையை நிர்வாகித்து வரும் எஸ்என்ஆர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயக்குமார் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக படிப்படியான வளர்ச்சியை எட்டி வரும் இந்த மருத்துவமனைக்கு, நோயாளிகளின் கவனிப்புக்கு இந்த சான்றால் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, திறன் போன்றவைகளில் என்ஏபிஎச் நிர்ணயித்த தரத்தில் எங்களது சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என்றார்.

என்ஏபிஎச், சான்றுக்கான தேவையான முறைகளில், மருத்துவமனையின் சீரிய நிர்வாகம், தீ விபத்திலிருந்து பாதுகாப்பு, பேரிடர் கையாளும் திறன், தொற்று நோய் தடுப்பு பயிற்சிகள், செவிலியர் அழைப்பு முறைகள், கருவிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோயாளிகளின் கருத்துக்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான தரச்சோதனைகள், பணியாளர் திருப்திபோன்றவை மருத்துவமனையின் தரமான செயல்பாடுகளாக மட்டுமின்றி, நிலையானதாகவும் இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நிர்ணயங்களை மிகவும் சரியாக அளிக்க இந்த என்ஏபிஎச் சான்று, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. தரமான சிகிச்சை அளிப்பதால், வாழ்க்கையை வளமிக்க நலமானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, பல்வேறு சமுதாய சேவைகளையும் மேற்கொண்டு பல சாதனைகளையும் படைத்துள்ளது. எட்டு மணி நேரத்தில் உடல் உறுப்பு தான உறுதி மொழியை அதிகம் பெற்று கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...