வெள்ளலூர் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மனு


வெள்ளலூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில்  கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், 

உக்கடம் பெரிய குளத்திற்கு தண்ணீர் திருப்பும் சட்டர், பாலம் கட்டுவதற்காக உடைக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் இனியும் சட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபடலாம் அல்லது அதிக நீர் வாய்க்கால் குளத்தை உடைக்க நேரிடும்.

மேலும், வெள்ளலூர் வாய்க்கால் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிடம் பேசி பத்து நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், உக்கடம் வாய்க்கால் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்  என தெரிவித்தனர்.

முன்னதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...