முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகள் பயணிகளின் வீடுகளுக்கு நேரில் விநியோகிக்கப்படும் - "கேஷ் ஆன் டெலிவரி" திட்டம் அறிமுகம்

இனி, முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள் , பயணிகளின் வீடுகளில் நேரில் விநியோகிக்கப்படும் போது கட்டணம் செலுத்தும் வசதியை ரயில்வே நிர்வாகம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக கட்டணத்தை செலுத்தும் வசதி மட்டுமின்றி, டிக்கெட்டை பெறும்போது பணத்தை செலுத்தும், "கேஷ் ஆன் டெலிவரி" திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி கூறியதாவது:- ஐஆர்சிடிசி இணையதளத்திலும், செல்லிடப் பேசி செயலியிலும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணி ஒருவர், டிக்கெட்டை மேற்கண்ட முறைகள் மூலம் முன்பதிவு செய்யும்போது இனிமேல் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, முன்பதிவின்போது பயணியால் அளிக்கப்படும் முகவரியில் டிக்கெட் நேரில் விநியோகிக்கப்படும்போது கட்டணத்தை அளித்தால் போதும். அந்த கட்டணத்தை ரொக்கமாகவோ, டிஜிட்டல் முறையிலோ அளிக்கலாம்.

முகவர், ரயில்வே கவுண்ட்டர் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறையில் இருந்து பயணிகள் தாமாகவே இணையத்தில் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு, பணம் செலுத்துவதற்கான வழிகளில் ஒரேயொரு முறை மட்டும், டிக்கெட் வீடுகளில் நேரில் விநியோகிக்கும்போது கட்டணம் செலுத்தும் வசதி என்பதில் தங்களை சேர்க்க வேண்டும்.

இந்த வசதியை பெறுவதற்கு, வடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் அல்லது பான் எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்க வேண்டும். 

ரூ.5 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.90 கட்டணமாக பெறப்படும். ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.120 கட்டணமாக பெறப்படும். ஒருவேளை பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகள், தங்களது வீடுகளில் விநியோகிக்கப்படும் முன் ரத்து செய்ய விரும்பினால், அதற்காக விநியோக கட்டணம், ரத்து செய்வதற்கான கட்டணத்தை தனியே அளிக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...