கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையான கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன்களை கட்ட மாட்டோம் என 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர். ரேஷன் கார்டு அடிப்படையிலான கட்டுப்பாடுகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


Coimbatore: தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன்களை கட்ட மாட்டோம் என்று கோவை கணுவாய் அருகே சோமையனூர் பகுதியில் விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில் சோமையனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுற்றுப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை கடன்களை கட்ட மாட்டோம் என்று விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.


ரேஷன் கார்டு அடிப்படையிலான கட்டுப்பாடுகள்


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி, "விவசாய பயிர் கடன் தள்ளுபடி சம்பந்தமாக பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். விவசாயிகள் தரப்பில் எதிர்க்கட்சித் தரப்பினர் அதிகமாக குரல் கொடுக்கின்றனர். எங்களைப் பொருத்தவரை அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது, அதில் சிறிதளவு நிறைவேற்றியுள்ளது என்பதை மறுக்க முடியாது" என்றார்.


"அரசாங்க அதிகாரிகள் விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். ஒரு ரேஷன் கார்டில் ஒருவருக்கு தான் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்றும், இரண்டு விவசாயிகள் இருந்தாலும் ரேஷன் கார்டு ஒன்று என்பதால் அவர்களுக்கு கிடையாது என்கின்றனர். இதுபோல் வாக்குறுதியில் சொல்லவில்லை. எனவே அனைவருக்கும் முழுமையான கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை" என்று கந்தசாமி தெரிவித்தார்.


கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலம் பாதிப்பு


"எங்கள் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை நாங்கள் யாரும் கடன்களை கட்ட மாட்டோம். அரசாங்கம் ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு பின்வாங்குவதால் இதுவரை செயல்பட்டு வந்த கூட்டுறவு வங்கிகள் இனி செயல்படாமல் போகும். ஏனென்றால் யாருமே கடன் கட்ட தயாராக இல்லை என்ற மனப்பான்மை உருவாக்கி விட்டார்கள்" என்று அவர் எச்சரித்தார்.


"புதிய அரசு அனைவரையும் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மற்றவர்கள் விரிக்கும் வலையில் நாங்கள் விழமாட்டோம்" என்று கந்தசாமி தெரிவித்தார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் அரங்கநாதன், பொருளாளர் சண்முகம், மாநில அமைப்பாளர் பிரபு, வடக்கு மாவட்ட செயலாளர் நரசிம்மராஜ், துணைத்தலைவர் பெருமாள்சாமி, S V N சேகர், கோவிந்தராஜ், D T K கதிர்வேல், N C K S சந்திரமோகன், V M D ரவி உள்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...