மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடம் பெற்று மாநகராட்சி ஆணையாளரிடம் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் ஆசிரியர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று மாநகராட்சி ஆணையாளரிடம் கௌரவிக்கப்பட்டனர்.

8-ஆம் வகுப்பு மாணவர் சு.டெரிக்பிரின்ஸ் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்றார். இரட்டையர் பிரிவில் 8-ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ஜே.விஷ்வதார் மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர் த.அ.ருத்ரதஷின் ஆகியோர் இணைந்து முதலிடத்தைப் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கோயம்புத்தூர் மாநகராட்சியின் பிரதான அலுவலகத்திற்கு வந்து மாநகராட்சி ஆணையாளர் Katta Ravi Teja IAS அவர்களிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களைக் காண்பித்தனர். ஆணையாளர் மாணவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், இடைநிலை ஆசிரியர் சக்திவேல் மற்றும் பள்ளி மாணவர்கள் உடனிருந்தனர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வாழ்த்து நிகழ்ச்சி அமைந்தது.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற இந்த மாணவர்கள் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...