பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளது. போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்துள்ளது.




கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Pawan K Reddy, IPS அவர்களின் முனைப்புடன் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.






இன்று (20.08.2026) பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பேரூர் காவல் நிலைய காவல்துறையினர் தீத்திபாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.




இந்த சோதனையின் போது, பேரூர் பகுதியைச் சேர்ந்த பால்துரை நாடார் மகன் சங்கர பாண்டி (52) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 1.10 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.




போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கோவை மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காவல்துறையின் உதவி எண்களுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




பொதுமக்கள் கோவை மாவட்ட காவல்துறையின் "Nizhal" என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களை பகிரலாம். மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.


Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...