கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S. சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். சுமார் 900 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இணைய பாதுகாப்பு குறித்து விவரிக்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் Cyber Crime Awareness Programme எனும் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 27, 2026 அன்று காலை 10.00 மணியளவில் திருமந்திரம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr S. ரவி மற்றும் பதிவாளர் B. V. பிரதீப் தலைமை தாங்கினர்.






இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக S. சௌந்தரராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP), தலைமையகம், கோவை மாவட்டம் கலந்துகொண்டு இணையக் குற்றங்கள், இணைய பாதுகாப்பு மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இணையவழி குற்றங்களின் தன்மை, அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.




கவிதா, Inspector of Police, Cyber Crime, Coimbatore District மாணவர்களுக்கு இணையவழி மோசடிகள், தகவல் திருட்டு, சமூக வலைதள குற்றங்கள் உள்ளிட்ট பல்வேறு இணையக் குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை விரிவாக விவரித்தார். தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.






இந்நிகழ்ச்சியில் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி K. M. G. ஆதி பாண்டியன், கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் சுமார் 900 மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...