கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் தீக்கிரையாகின. சம்பவ நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்குச் சென்றிருந்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதமும் காயங்களும் தவிர்க்கப்பட்டன.
Coimbatore: கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலக் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் தீக்கிரையான நிலையில், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அவற்றில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில், ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட தீ கணநேரத்தில் அருகிலிருந்த கொட்டகைகளுக்கும் பரவியது. அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் 6 சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

மொத்தம் 7 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது. தகவலறிந்து பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தகரக் கொட்டகைகளை உடைத்து உள்ளே சென்று, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்குச் சென்றிருந்ததாலும், அங்கிருந்த சிலர் உடனடியாக வெளியேறியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்தடுத்து 7 சிலிண்டர்கள் வெடித்து 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அவற்றில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பெரும்பாலான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில், ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட தீ கணநேரத்தில் அருகிலிருந்த கொட்டகைகளுக்கும் பரவியது. அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் 6 சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.
மொத்தம் 7 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது. தகவலறிந்து பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தகரக் கொட்டகைகளை உடைத்து உள்ளே சென்று, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்குச் சென்றிருந்ததாலும், அங்கிருந்த சிலர் உடனடியாக வெளியேறியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்தடுத்து 7 சிலிண்டர்கள் வெடித்து 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.